Friday, February 25, 2011

என் மொழி தமிழ் மொழி ...!

ரசித்த ஒரு கவிதை ... நீங்களும் ரசியுங்கள்...!!!

தமிழ் மொழி


தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...


சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..


சூடு பட்டால்
மட்டும் உ...ஊ..


அதட்டும்போது
மட்டும் எ..ஏ...


ஐயத்தின்போது
மட்டும் ஐ...

ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ...ஓ...


வக்கணையின் போது
மட்டும் ஒள...


விக்கலின்போது
மட்டும் ...?

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!

5 comments:

Unknown said...

அருமை. தொடருங்கள்.

ச பாபு said...

தமிழன் என பெருமை படுகிறேன் என் மொழி தமிழ் ..... பாபு. ச

டேவிட் said...

மிக்க நன்றி கே. ஆர்.விஜயன்...

sakthivel said...

தமிழக்கு நன்றி, என்னை பெற்ற தமிழ் அன்னைக்கும் நன்றி

Chandru said...

மிகவும் அருமையாக உள்ளது

நாடங்கும் தமிழ் என கொதிக்கிறது ஆனால் தமிழரின் பெரியரில் கூட தமிழ் மொழி இல்லை

Post a Comment